India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, புதுச்சேரியில் மருத்துவர் ரா.மேனகா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சிவகங்கையில் எழிலரசி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் வட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ரூ 61,000 பணத்தை உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எடுத்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் ராஜா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்தனர்..

கரூர், குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையப்பட்டியில் உள்ள 5-ஆவது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து பணிக்கம்பட்டி சந்தை நான்கு ரோடு பகுதியில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சேலம் ஏவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நேற்று
ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம், தொழில்நுட்பத் திருவிழா‘24 – டெக்பெஸ்ட் ’24’ நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் ராஜ விநாயகம் தலைமையில்,
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிக்காட்டினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிராமணர் அல்லாதவர் தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என மிரட்டும் தென்கலை பிரிவு பிராமணர்கள் குற்றச்சாட்டு. மேலும் தென் கலை பிராமணர்களின் செயலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து முகம் சுளிப்பு ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முருங்கைகாய் விலை உச்சம் பெற்றது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதன் விலை சரிய தொடங்கியது. வேகமாக சரிந்து வந்த முருங்கைகாய் விலை இன்று (மார்ச் 24) ஒரு கிலோ 25 ரூபாய்க்கு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிதம்பரம் மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மண்டல அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.

திருவாரூர், கொரடாச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற வேட்பாளர்கள் தஞ்சாவூர் முரசொலி (திமுக) நாகப்பட்டினம் செல்வராஜ் (இ.கம்யூ.) ஆகியோரை அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பவானியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் பவானி ராஜயோக தியான நிலையத்தில், 88 ஆவது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது. பல பிறவிகளுக்கு புண்ணியத்தை அடைய சோமநாதர் லிங்கத்துக்கு முன் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பவானி சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.