Tamilnadu

News March 24, 2024

வாக்களிப்பதன் அவசியம் என்ன? – உறுதிமொழி ஏற்ற மாணவிகள்!

image

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

வளசரவாக்கம் குடிநீர் குழாய் உடைப்பு – பொதுமக்கள் அவதி

image

சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது . சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கின.

News March 24, 2024

கன்னியாகுமரி: செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

image

கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் சூசை (57), மீனவர்.
இவர் கன்னியாகுமரியில் சீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று செல்போன் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சூசை கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.

News March 24, 2024

நாமக்கல்: க்யூ. ஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஏப் 19ல் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்த அழைப்பிதழில் உள்ள க்யூ. ஆர் கோடு ஸ்கேன் செய்தால் வாக்காளர்களின் வாக்குச்சாவடி அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது

News March 24, 2024

வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

image

‘கடலூர் பாராளுமன்ற தொகுதியின் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் எம்.பி-யை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ என்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

விருதுநகர்:ஆடு வெங்காயத்தை தின்றதால் ஏற்பட்ட பிரச்சனை

image

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கலா?

image

தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி ராமதாஸ் (பாமக) அவர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வேட்பாளரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

News March 24, 2024

சேலத்தை வாட்டி வதைக்கும் வெயில்

image

சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் நேற்று 101.7 டிகிரி ஆக உயர்ந்துள்ளது. உஷ்ணத்தை உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறி சீக்கிரத்திலேயே களைப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News March 24, 2024

கிருஷ்ணகிரி: காரில் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த நபர் கைது.

image

ஒசூர் அடுத்துள்ள பாரந்தூர் சாலையில், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது. பூனப்பள்ளி வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான 240 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த பாரந்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.

News March 24, 2024

ரயில் நான்கு நாட்களுக்கு ரத்து

image

நாகர்கோவில் – கோவை ரயில் சேவை இன்று (மார்ச். 24) முதல் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில் விரைவு ரயில்கள் மார்ச் 24, 25, 26, 27 உள்ளிட்ட தேதிகளில் ரத்து செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!