Tamilnadu

News April 17, 2024

இன்று மாலை நிறைவடைகிறது பிரச்சாரம்,

image

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. திருச்சி தொகுதியில் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா ,அமமுக சார்பில் செந்தில்நாதன்,நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

News April 17, 2024

சித்ரா பௌர்ணமி கிரிவலம்

image

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 05.47 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 17, 2024

சிவகங்கை: தேர்தல் விதிமீறல் வழக்கு நிலவரம்

image

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விதிமுறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் தொடா்பாக திமுக, காங்கிரஸ், பாஜக, நாம்தமிழர் உள்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மீது இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News April 17, 2024

பூதலூர் அருகே விபத்து! 30 பேர் காயம் 

image

பூதலூர் அருகே வில்வராயன்பட்டியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை டாட்டா ஏசி வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அயனாவரத்தில் இருந்து பூதலூர் வரும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள வாய்காலில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 17, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

image

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

News April 17, 2024

மதுக்கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் உள்ளிட்ட மதுபானக்கடைகள் மூடப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராயபுரம் கல்லறை சாலையில் உள்ள மதுகடையில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலை மோதியது. 3 நாள் விடுமுறை என்பதால், சிலர் மொத்தமாக வாங்கி சென்றனர். அதிக மதுபாட்டில்கள் முன்கூட்டியே விற்றதால், விரும்பிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என புலம்பினர்.

News April 17, 2024

ஆண்டிபட்டி அருகே ஒருவர் பலி 

image

முத்தாலம்பாறையைச் சேர்ந்தவர் தனிக்கொடி. இவர் வீட்டின் அருகே தனி தகர செட்டில் தங்கி இருந்தார். கடந்த 14 ஆம் தேதி அவர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்  தடுமாறி கீழே விழுந்து பாறையில் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2024

திண்டுக்கல் எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட காவல்துறையினருடன் கேரளா போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் தேர்தல் அவசர புகார் குறித்து 8525852636 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் குறித்து 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

48 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செங்குணம் சாலையில் ஒன்றியப் பொறியாளா் ஜெயந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 48 வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் காமராஜை (48) போலீசார் கைது செய்த நிலையில் காா்,மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 17, 2024

கோவை: குளத்தில் மூழ்கி 13 வயது சிறுவன் பலி

image

சூலூர் சிந்தாமணி புதூரை சேர்ந்த தம்பதி பெருமாள் சாமி – ஈஸ்வரி. இத்தம்பதிக்கு இளமாறன்(13), கபிலன் உள்ளிட்ட இரு மகன்கள் உள்ளனர். நேற்று ஈஸ்வரியும் , பெருமாள் சாமியும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் இளமாறன் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!