Tamilnadu

News April 29, 2024

வெப்பத்தால் சாதனங்கள் செயலிழப்பா?

image

நீலகிரி எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும்படியாக இல்லை, சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 29, 2024

மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (ஏப்.29) பள்ளி மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமானது வருகின்ற மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.

News April 29, 2024

ஊட்டிக்கே இந்த நிலைமையா?

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

News April 29, 2024

ரயில்வே நிர்வாகம் கட்டணத்தை வெளியிட்டது

image

திருவண்ணாமலை சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு மே 2 ஆம் தேதி முதல் தினசரி ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் நேர பட்டியலையும் மற்றும் பயணக் கட்டணமாக ரூ.50 நிர்ணயித்து தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் சென்னை நகரத்து பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 29, 2024

77 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்

image

தமிழக முழுவதும் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 2299 பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 77 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பலர் தேர்வுக்கு ஆர்வாமாக தயாராகி வருகின்றனர்.

News April 29, 2024

மழை அளவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வெப்பத்தினால் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஏப்.29) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக மாவட்டத்தில் 9 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News April 29, 2024

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாளமுத்து நகர் போலீசார் நேற்று மாதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 29, 2024

நெல்லையப்பர் கோவிலில் மாணவிகளின் பரத நாட்டியம்

image

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (ஏப்.28) இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் பரத நாட்டியத்தை கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

News April 29, 2024

முண்டந்துறை: வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

image

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் முண்டந்துறை வனச்சரக பகுதிகளில் இன்று வரையாடு கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் கல்யாணி தலைமையில் தொடங்கப்பட்டது. இந்தப் பணியானது ஐந்தலைப் பொதிகை, அடுப்புகள் மொட்டை, அகத்தியர் மலை, செம்பூஞ்சி மொட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த பணி முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 29, 2024

குமரி: பத்மநாபபுரம் அரண்மனையின் சிறப்பு

image

தக்கலை அருகே பத்மநாதபுரம் என்னும் ஊரில் கிபி.1601 இல் வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டது. திருவாங்கூர் மன்னர்களின் உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது. இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

error: Content is protected !!