India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சக்ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விருப்பமுள்ளவர்கள் awards.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.6.2024 ஆகும். மேலும் விபரங்களுக்கு இளைஞர் நலன் அலுவலரை 74017- 03516 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளம், என 9 குளங்கள் உள்ளன. குளம் உட்பட பெரும்பாலான குளங்கள், ஆகாய தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன மாநகரின் நீராதாரத்தை அதிகரிக்கச் செய்யும் குளங்கள் அத்தனையும், ஆகாயத்தாமரையின் பிடியில் சிக்கியுள்ளன இந்த நிலையில் நேற்று குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 3 பெரிய உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம்(ஜூன் 10) நடந்தது. இதில் ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 100 வசூலாகி இருந்தது. 5 சவரன் தங்க நகைகளும் காணிக்கையாக கிடைத்தன.

கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்கௌதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளியில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டைமற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் நிறுவனம் நிறுவ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நேற்று(ஜூன் 12) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பெருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கீழநாகாச்சி
பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 12) நாளை மறுநாள்வரை (ஜூன் 14) 3 நாள்களுக்கு உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 11) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 150 லிட்டர் கள்ளச்சாராயம், 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 49 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 16 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 11) தெரிவித்ததாவது, நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 28ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை ஓராண்டு பயிற்சி நடப்பாண்டு தொடங்கப்பட உள்ளது. 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2998632 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.