Tamilnadu

News August 20, 2025

புதுகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 19-க்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வரும் ஆக.,21-ம் தேதி திருக்கோகர்ணத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இதில் 15 அரசு துறையைச் சேர்ந்த 46 சேவைகளுக்கு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். அதனை படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

ரயில் பயண சீட்டு விற்பனை முகவர் பணி: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட குமாரமங்கலம், கல்பட்டிசத்திரம், கொளத்தூர், பூங்குடி ரயில் நிலையத்தில் பயண சீட்டு விற்பனை முகவர் வேலைக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்தந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆக.,25-ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தகவல்களுக்கு ரயில் நிலைய மேலாளரை அணுகவும்.

News August 20, 2025

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அவசர அழைப்பு எண் 100-க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை செய்த போடு இது உறுதியானது. பின்னர் விருதுநகரைச் சார்ந்த கதிரேசன், மதுரையைச் சார்ந்த சூர்யா மற்றும் 3 பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

News August 20, 2025

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

மண்டபம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் முகாம்

image

மண்டபம், மறவர் தெரு கடற்கரை பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று ஆகஸ்ட் 19.08.2025 செவ்வாய்கிழமை முதல் 21.08.2025 வியாழன் கிழமை வரை ஆதார்கார்டு இல்லாத அல்லது புதுப்பிக்க வேண்டிய மாணவர்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து வந்து சிறப்பு சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 20, 2025

குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 19) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 20, 2025

அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகள் தொடக்கம்

image

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாக், டயாலிசிஸ், ஆக்சிடெனட் கேர் ஆகிய 3 படிப்புகளுக்கு
சுகாதாரத்துறை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அரசு ஒதுக்கீடு 24, சுயநிதி ஒதுக்கீடு 6 என மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சேர சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News August 20, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் 27 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த ராஜ மனோகரனுக்கு பதிலாக தூத்துக்குடியில் பணிபுரிந்த முன்னாள் தனித்துணை ஆட்சியர் ஹபிபுர் ரஹ்மான் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 20, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக.19) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!