India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார், திருச்செந்தூர் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 17) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் 94 லிட்டர் கள்ளச்சாராயம், 262 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் நேற்று(மார்ச் 17) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று(மார்ச் 17) நடந்தது. இதில் கலால் உதவி ஆணையர் முருகேசன், கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, வானூர் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு, தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

2024 கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில்(WAR ROOM) கட்டளை மையம் திறப்புவிழா நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., மாநில சட்டத்துறை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞரணி அணி கலந்து கொண்டனர்.

’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.

கோவையில் இன்று பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று கூறினார். மேலும் அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் என்று தெரிவித்தார்.

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி பகுதியில் நேற்று குடியிருப்பில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 35, மற்றும் ராஜேந்திரன் 28 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தைச் சேர்ந்தவர் நாராயணன் இவர் மைக் செட் கடை வைத்து தொழில் செய்து வந்தார். அந்த தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மைக் செட் தொழிலை கைவிட்டு கூலி வேலைக்கு செல்ல தொடங்கினார். இந்நிலையில் இவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.