India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்பு அவர் கூறியதாவது, நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எங்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு உள்ளது என கூறினார்

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.இதில்
திருநங்கையர்களின் கரங்களில் 100% வாக்களிப்போம்,100% Vote , Myvote my pride,My vote my right, 19.04.2024 போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர் ஆகிய 6 சட்டம் மன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சு.வெங்கடேசன் இன்று மாவட்ட தேர்தல் நடத்து அலுவலர் சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில் புரட்சித்தலைவி அம்மாவின் திட்டங்களால் மாபெரும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கையுடன் கூறினார்.

கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கலை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார்கள். இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி வேட்பாளர் தங்கவேல் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் இருந்தனர். அதேபோன்று, பாமக, அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். எனவே விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஓம் பிரகாஷ் என்பவரை வேட்பாளராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன் என உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.