India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.

தமிழக முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதனையடுத்து இன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் T.நாராயணசாமி வெற்றிக்காக இன்று 26.3.2024 அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் முருக்கோடை இராமர் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தேர்தல் பணிகள் எவ்வாறு செய்வது குறித்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினர்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் தொடா்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு, கருஞ்சிறுத்தை மக்கள் இயக்கம் சார்பாக நிறுவனர் அதிசய பாண்டியன் கருப்பு சட்டை அணிந்து, நெல்மணியை மாலையாக கோர்த்து, கழுத்தில் பச்சை துண்டுடன், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 26) காலை வந்தார். இதனால் கொக்கிரகுளம் சிக்னல் அருகே பரபரப்பு நிலவியது.

கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதற்கு முன் இருந்த எம்பி யாரும் பார்த்ததில்லை. கோவை தொகுதியில் உரிமைகளை கேட்டு பெற வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அதிமுக ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயளாலர் அய்யப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், மருத்துவர் பொன்னரசு மற்றும் தியாகதுருகம் மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று (26.3.2024) ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி பெரும் மதிப்பெண்களை பெற்று நமது ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் படி அவர்களை வாழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.