India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாராளுமன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் ஆகும். எனவே புதுச்சேரியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் தமிழ்மணி உருவம் பொறித்த போஸ்டர்கள் அதிக அளவு இரண்டு தினங்களாக ஒட்டப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்…

2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.

அதிமுக சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்கு சேகரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், ஓ.எஸ் .மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரும் மனைவி உமாவும் நேற்று (மார்ச் 26) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென இவர்களது கூரைவீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்றிரவு (மார்ச் 26) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தினேஷ் (34), ஜெயபிரகாஷ் (24), அஜித் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெங்கடு கிராமம், பாலாறு படுகையில் பூமியில் புதைத்து வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த கலையரசி(50) கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து கலையரசி மீது பல புகார்கள் நிலுவை உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பரிந்துரையின் பேரில், கலைச்செல்வியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.