India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த திருமூர்த்தி, அழகன் ஆகிய இருவரும் நேற்று (மார்ச்.20) இரவு உடுமலை மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில், பழனி செல்லும் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனும் போட்டியிடுவதற்காக தங்கள் கட்சியிடம் சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஒருவேளை இவர்களுக்கு சீட் வழங்கபட்டு ஒருவர் வெற்றிபெறும் பட்சத்தில் வெற்றிப்பெற்றவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

திருவிடைமருதூர் தாலூகா ஆவணியாபுரத்தில் இன்ஜினியரிங் மாணவர் முஹம்மது முன்தஸிரை (19), காதல் விவகாரத்தில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இஜாஸ் அகமது (20), ஜலாலுதீன் (19), சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் இஜாஸ் அகமது, ஜலாலூதின் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் 7200555395 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். ஶ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 9940353325 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம். மேலும் தாம்பரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரடியாகவே புகார் தெரிவிக்கலாம் என தொகுதிகள் தேர்தல் செலவினங்கள் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் வழங்குவதற்கு உரிய ஆவணங்கள், பதிவேடுகள் முறையாக பேணப்பட்டு இருக்கிறதா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த குழுக்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ள சந்திரமோகன் என்பவர் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக – திமுக நேருக்கு நேர் போட்டி உருவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டதையொட்டி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் ஆனந்தன் மற்றும் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் இருவருக்கும் ஆதரவான போஸ்டர் யுத்தம் நடைபெற்ற நிலையில் கூட்டணிக்காக ஜான்பாண்டியன் தென்காசி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருளை அலைபேசியில் அவதூறாகவும், அநாகரிகமாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைச்சர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் பாமகவினர் கூறியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 24 நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் 24/7 நடைபெற்று வருகிறது நாமக்கல் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நடைபெற்றது மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மரு.ச.உமா கலந்து கொண்டார்.

சென்னை கொளத்தூரில் ரசாயன சிலிண்டர் வெடித்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்பரஸ் எனும் வேதிப்பொருள் வெடித்ததில் மாணவர் ஆதித்யா உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.