India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி முகவர்களுக்கு வரும் 24.03.2024 ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 24.03.2024 மாலை 3 மணியளவில் வடலூர், மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மார்ச் 22) மழை பெய்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை தென்காசி, கொல்லம், பத்தனம்திட்டா பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இந்தியா கூட்டணி கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். மேலும் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழப்பார் எனத் தெரிவித்தார்.

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் அடுத்த மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மார்ச் 25 மதியம் 2 மணி முதல் மார்ச் 26 இரவு 9 மணி வரை பண்ணாரி-ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டி.ஜிபுதூர் நால்ரோடு-கடம்பூர்-ஆசனூர் வழியாக மைசூர் செல்லலாம் என சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகே. புரம் கட்டப்புளியை சேர்ந்தவர் பாபநாசம் (74). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சம்பவத்தன்று கடைக்கு இட்லி வாங்க வந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் பாபநாசத்தை போக்சோ சட்டத்தில் இன்று ( மார்ச் 22 ) கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் பாராளுமன்ற தேர்தலையொட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே 2023-2024-ம் நிதியாண்டில் 31.03.2024 அன்று முடிவடையும் பேருந்து அட்டையினை 30-06-2024 வரை பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் சங்கீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

பேச்சிப்பாறை அருகே வலிய-ஏலா பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற இளைஞர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிணந்தோடு பகுதியில் வைத்து இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர் வட்டம் சேலம் நெடுஞ்சாலை மஞ்சவாடி கணவாய் அருகில் மார்ச் 22 ஆம் தேதி இரும்பு தளவாடங்கள் ஏற்றிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் (லாரி) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.