Tamilnadu

News March 24, 2024

உறியடி வெங்கட்ராமன் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

image

சின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியில் உள்ள உறியடி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நேற்று பங்குனி மாத சனிக்கிழமையையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 24, 2024

சுங்கச்சாவடியை மூடுக-வணிகர்கள்!

image

தமிழ்நாட்டில் உள்ள 10 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகின்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என மதுரை பழம் உற்பத்தியாளர் சங்க தலைவர் திருமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் சுங்கச்சாவடி கட்டண உயர உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு வியாபாரிகள் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

சென்னையில் கிருஸ்தவர்கள் குருத்தோலை பவனி

image

சென்னயில் கிருஸ்தவர்கள் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும் பவனியாக சென்றனர்.

News March 24, 2024

விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

News March 24, 2024

திருச்சியில் தயார் நிலையில்…

image

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று (24.03.2024) நடைபெற உள்ளது.

News March 24, 2024

திமுக வேட்பாளர் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

News March 24, 2024

நாமக்கல்: மருத்துவ முகாமில் பொது மக்கள் பங்கேற்பு

image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

பாபநாசத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது…!

image

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள்
கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News March 24, 2024

கடலூரில் இன்று பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் அறிமுக கூட்டம், கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாமக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்வதோடு கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

News March 24, 2024

20,000 பேர் அஞ்சல் வாக்கு அளிக்க ஏற்பாடு!

image

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!