Tamilnadu

News March 18, 2024

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

image

2024 மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களை தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் கே.ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திருவள்ளூரில் மீண்டும் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.

News March 18, 2024

கிருஷ்ணகிரியில் களமிறங்கும் காங்கிரஸ்!

image

2024-மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியிலும் காங்கிரஸ் களம் இறங்குவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங். சார்பில் செல்லகுமார் வெற்றி பெற்று எம்பியானது குறிப்பிடத்தக்கத்து. அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் உட்பட 15 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

News March 18, 2024

புதுச்சேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக வி.வைத்திலிங்கம் போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் போட்டி 

image

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஞானதிரவியம் வெற்றிபெற்றார்.

News March 18, 2024

மரக்காணம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

image

மரக்காணம் நடுகுப்பத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நடத்த காவல்துறை தடை விதித்தது. இந்நிலையில் நேற்று(மார்ச் 17) ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி காவல்துறை மீண்டும் திருவிழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தேர்தலை புறக்கணித்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்தனர்.

News March 18, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

News March 18, 2024

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

News March 18, 2024

சிவகங்கை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

image

மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் வெற்றி பெற்றார்.

News March 18, 2024

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி

image

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!