India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலைக்குழு கீழக்கரை தனி வட்டாட்சியர் ராமமூர்த்தி, சிறப்பு எஸ்ஐ வேல்முருகன் உள்ளிட்டோர் உச்சிப்புளி பருந்து விமான தளம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்கள் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.12.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இத்தொகையை வருமான வரி துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

2024 மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வேண்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் 2024 தேர்தல் தொடர்புடைய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

2024 மக்களவைத் தேர்தல், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோழவந்தான், உசிலம்பட்டி ஆகியவை தேனி மக்களவைத் தொகுதி.

2024 மக்களவைத் தேர்தல்,தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடவுள்ளார். 2001,2011, 2016 எனமூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.2019 ஆம் ஆண்டு அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2021இல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இத்தொகுதியில் இந்த முறை திமுக-வே நேரடியாக போட்டியிடவுள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதையடுத்து தேமுதிகவினர் தற்போது தேர்தல் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைந்து சில மாதங்களே ஆன நிலையில் அவரது மகன் இங்கு போட்டியிடுவதால் அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிக நிர்வாகிகள் பணியை துவக்கியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்கள் தேர்தல் செலவீனம் கணக்கீட்டாளர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி , தேர்தல் செலவீன பார்வையாளர் வீ.டி.எஸ்எஸ்.நாகர்ஜீன் கிரான்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3வது தளத்தில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருப்பெரும்புதூர் சந்தோஷ் சரண், காஞ்சிபுரம் மதுக்கர் ஆவேஸ் , மற்றும் வருமான வரி நோடல் அலுவலர் காஞ்சிபுரம் பி.பாலமுரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.