India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில் ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக
கண்காணிக்கப்படுகின்றனர் . பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. கன்னியாகுமரியில் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. தென்சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் செல்வமும் போட்டியிட உள்ளனர். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 3ம் கட்ட பட்டியல் சற்றுமுன் வெளியானது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிக்கு நேரில் வர இயலாத வாக்காளர்களுக்கான 12D க்கான படிவத்தினை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வங்கி ஊழியர் காலணியில் வசிக்கும் 88 வயது மூத்த குடிமகன் சீனிவாசன் என்பவருக்கு ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று வழங்கினார்.
உடன் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் இருந்தனர்.

திமுக கூட்டணியில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில், பாஜக-விற்கு வாய்ப்புள்ளதால் திமுக-வே போட்டியிட முடிவு செய்தது. திமுக சார்பில், கணபதி பி. ராஜ்குமார் போட்டியிடவுள்ளார். இவர் 2014இல் கோயம்புத்தூரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுக-வில் இணைந்தார்.

தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் கணேசன் காணாமல் போயுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.