Tamilnadu

News April 22, 2024

ஆர்.டி மலையில் சிவன் கோவில் பிரதோஷ வழிபாடு

image

குளித்தலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் எதிரே உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

News April 22, 2024

பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

image

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று (ஏப்ரல். 21) நடைபெற்றது. நிகழ்ச்சி அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி (ம) ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 22, 2024

வெயிலின் தாக்கத்தை தீர்த்த நண்பர்கள் சங்கம்

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பொதக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் கூல் பிரண்ட்ஸ் நண்பர்கள் சங்கம் இப்பகுதியில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் பொதக்குடி சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தர்ப்பூசணிப்பழம், ஐஸ் மோர் ரோஸ்மில்க் போன்ற குளிர் பானங்களை வழங்கினர்.

News April 22, 2024

பழவேற்காட்டில் தீப்பற்றி எரிந்த மீனவர்களின் வலைகள்

image

பழவேற்காடு: கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட மீனவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 22, 2024

புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

image

புதுவை வில்லியனுார் ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் கால பூஜை, யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10:05க்கு புட்டலாய் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News April 22, 2024

மீனாட்சியம்மனுக்கு இவ்வளவு அலங்காரமா ?

image

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில்  திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.

News April 22, 2024

ஈரோடு: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

image

கோபி அடுத்த டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29). கர்ப்பிணியான பூமணிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பூமணிக்கு பிரசவ வலி அதிகமானது. எனவே 108 வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி மருத்துவ உதவியாளர் பூமணிக்கு பிரசவம் பார்த்தார். இதில் பூமணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

News April 22, 2024

கடலூர் சட்டமன்ற தொகுதியில் 68.33% வாக்குகள் பதிவு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதியில் 2,41,751 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 80,340, பெண் வாக்காளர்கள் 84,819, மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் என மொத்தம் 1,65,196 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த வகையில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 68.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 22, 2024

பஞ்சு ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

image

திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து. சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். ஊத்துக்குளியிலிருந்து நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிவந்தார். வெள்ளகோவில் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மின் கம்பியில் உரசி எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.

News April 22, 2024

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு பலி

image

காட்பாடி லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று (ஏப்ரல்.21) ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 40 வயதுதக்க நபர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டனர். 

error: Content is protected !!