Tamilnadu

News April 20, 2024

பெருமாள் கோயிலில் டிடிவி சாமி தரிசனம்

image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி அருகே வயல்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். மேலும் நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 20, 2024

ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் சீல்வைப்பு

image

ஈரோடு மக்களவை தேர்தலில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று பாதுகாப்பு இருப்பறையில் வைத்து, சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவுடன் அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

News April 20, 2024

பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 57 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் , 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களும் , 200 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நன்றி மடல்

image

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

தமிழக, கேரள எல்லையில் தீவிர சோதனை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ள தகவலில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News April 20, 2024

நாமக்கல்: வாக்கு இயந்திரங்களுக்கு சீல்வைப்பு

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகள் எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர் ச. உமா, தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது

News April 20, 2024

தூத்துக்குடியில் 66.88% வாக்குகள் பதிவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1624 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 66.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம்

image

வத்தலகுண்டு நகரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் இன்று இயற்கை எய்தினார். அவரது சகோதரரின் ஒப்புதலுடன் இன்று திண்டுக்கல் லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க தலைவர் கே. ஆர்.கேவின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக முழு உடலையும், 28-வது முறையாக கண்தானம் வழங்கப்பட்டது.

News April 20, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் அருகே திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜான் சம்பத் (46) என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

தூத்துக்குடியில் நாளை இதற்கு தடை

image

தமிழக அரசு உத்தரவின்படி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்த வித உயிரினங்களையும் இறைச்சிக்காக அல்லது வேறு எந்த காரணங்களுக்காக வதை செய்யவோ கூடாது, மீறினால் சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!