India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி: பங்குனி உத்திர நாளை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் மார்ச் 24ஆம் தேதி அ.தி.மு.க (ம) கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி அவர்களால் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த பிரச்சாரம் திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக அஜித்குமார் என்கின்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழுவினர் கொலை செய்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு இடர்பாடுகள் ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பட்டமங்களம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனரா என ஆட்சியர் மகாபாரதி இன்று ஆய்வு செய்தார்.

தேமுதிக சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லதம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக சார்பில் மத்திய தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

தேமுதிக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பார்த்தசாரதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலை பகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர சோதனையில் இன்று (மார்ச்.22 )ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலுவின் வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் வள்ளி நகர் பகுதியில் இன்று 22.03.2024 வெள்ளிக்கிழமை வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் திருநங்கைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை அடுத்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.