India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற புதுவை குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பாராட்டினார். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் அவர்களின் தந்தை ஆர்.தூண்டி இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி ஊர்வலம் 08.05.2024 இன்று வாழக்கரை அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம், உடையாளூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் மதில்சுவர் அமைப்பதை வன்மையாக கண்டிப்பதாக ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சை ஆட்சியர் உடனடி நடவடிக்கை வேண்டும் எனவும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆழ்வார்புரத்தில், பள்ளி மாணவர்களுக்காக நடக்கும், கோடை கால பயிற்சி முகாமில்,
சமூக ஆர்வலர் அசோக் குமார், விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு வழங்கிடும் விதமாக, நுங்கு பற்றியும், அதில் இருக்கும் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை பற்றி விளக்கினார்.
பின்னர், நுங்கு சாப்பிட்ட பிறகு அதில் வண்டி செய்து குழந்தைகளுக்கு விளையாடி காட்டினார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்டத்தில் பாடம் வாரியாக 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம், மொழிபாடம் -3 பேர்,இயற்பியல்-67,வேதியியல்-52, உயிரியல்-183,தாவரவியல்-10,விலங்கியல்-30,கணினி அறிவியல்-178,புவியியல்-1,உயிர் வேதியியல்-1,கணிதம்-222,வரலாறு-2,பொருளியல்-21வணிகவியல்-84,கணக்கியல்-18 மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில்-35 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பராமரிப்பில்லாத கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பொதுப்பணித்துறை அலுவலர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஓரிரு வாரத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜோலார்பேட்டையில் 17 பேரும், காட்பாடியில் 16 பேரும், ஓசூரில் 4 பேரும், சேலம் மற்றும் தர்மபுரியில் தலா 3 பேரும் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா மாணவ, மாணவிகள் ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்.சௌமியா 500-க்கு 477 மதிப்பெண்களையும், கே.சௌமியா – 476, பி.ஹர்சிகா 470, தனிஷ்கா 469 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் முதல்வர் கார்த்திகா லட்சுமி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்

நெமிலி தாலுகா பொய்கை நல்லூர் கிராமத்தில் இன்று(மே 8) தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொய்கை நல்லூர் கிராமத்தில் தேர் வெள்ளோட்ட முன்னேற்பாடு குறித்து நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் நேற்று(மே 7) ஆய்வு நடத்தினார். அப்போது தேரோட்டம் நடைபெறும் தெருகளில் மேடு பள்ளங்கள் ஏதேனும் உள்ளதா, மின் வயர்களின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். உடன் போலீசார் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.