Tamilnadu

News April 2, 2024

நாகையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

News April 2, 2024

மக்களவைத் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத்  தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் ! என்று அழைப்பிதழை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ளார். இதன்படி
இவ்விழாவில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மக்களவைத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம்.

News April 2, 2024

வைகை ஆறு வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

image

வெள்ளிமலை வனப்பகுதியில் மழையின்மை மற்றும் வெயில் தாக்கம் காரணமாக வைகை ஆறு வறண்டு போனது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீருக்காக வைகை ஆற்றை சார்ந்துள்ள கடமலை – மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தை போக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 2, 2024

அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார்‌. அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.

News April 2, 2024

அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பு

image

திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவர்குடி மற்றும் வங்கநகர் பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. பலமுறை அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்கள் அறிவித்தும், அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கியும் ,எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகை வழங்கி விழிப்புணர்வு.

image

ஆரணி பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேலதாளம் மற்றும் சீர்வரிசை தட்டுடன் சென்று பேருந்தில் பயணித்த முதல் முறை வாக்காளர்களுக்கு பத்திரிகையை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 2, 2024

மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க வேண்டும்-ரோகிணி

image

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (02.04.2024) நடிகை ரோகிணி தெற்கு வாசல் மார்க்கெட், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

News April 2, 2024

வேலூர்: அண்ணன் மகனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

image

வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் துரை தயாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

News April 2, 2024

பெரம்பலூர்: வாக்களிக்க இந்த ஆவணங்களில் ஒன்று தேவை!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 அன்று நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை உட்பட தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட 12 வகையான ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

ஒகேனக்கல்: யானை மிதித்து முதியவர் பலி

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(60). நேற்று(ஏப்.1) இவர் பெரியபள்ளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒற்றை யானை திடீரென தாக்கியதில், அங்கேயே படுகாயம் அடைந்து மாதையன் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஒகேனக்கல் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!