India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர், குடவாசல் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் குருவி குருசக்தி (39) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால் மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில் குருசக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமொழி, கவிதா தம்பதியினரின் மகள் மகதி சர்வதேச சதுரங்க பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு பயிலும் இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், இவர் நாகை மாவட்ட அளவில் சர்வதேச சதுரங்கப்போட்டியில் இடம்பெற்ற முதல் பெண் சதுரங்க ஆட்டக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (ஏப்ரல் 2) தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பழனி ஆயக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்கள் முன்பு பேசிய சீமான் அண்ணாமலை தன்னை காப்பி அடித்து பேசுவதாக குற்றம் சாட்டினார். பாஜகவின் பி டீம் இல்லை பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் பி டீம் என விமர்சனம் செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் பாட்டு பாடி மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடுமலை தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள அணிக்கடவு கிரி வீட்டில் நேற்று (ஏப்ரல் 1) மாலை 6 மணியிலிருந்து வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் வீட்டில் திடீரென வருமானவரித்துறை சோதனை செய்தது உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி அம்மனுக்கு பூச்செரிதல் நிகழ்ச்சியும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகின்றது . 11 தேதி கம்பம் போடுதல் ,18ம் தேதி கொடியேற்றம், பூவோடு ஆரம்பம் 24ஆம் தேதி அதிகாலை மாவிளக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

ஶ்ரீபெரும்புதூர் அருகே சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). இவர் தனது மனைவி, பேரனுடன் தனது இருசக்கர வாகனத்தில் சிவன்தாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.