Tamilnadu

News March 30, 2024

அதிமுக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகம் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முன்னாள் அமைச்சர் மோகன் வழங்கினார்.

News March 30, 2024

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

image

மன்னார்குடி ஜேசி சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நேற்று (29/3/24) மாலை நடைபெற்றது. இதில் ஜே சி தலைவர் வினோத் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மகேஷ் முன்னிலை வகித்தார் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் (ம) செல்பி ஸ்டான்டு (ம) வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார். ஜே.சி செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

News March 30, 2024

கிருஷ்ணகிரியில் சிறப்பு ஆராதனை

image

கிருஷ்ணகிரியில், பெங்களூரு ரோடு அருகே அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று (மார்ச் 29) காலை 7 மணி அளவில் சிலுவைப்பாதை நடைபெற்றது. பின் மாலை 6:30 மணி அளவில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வருகைபுரிந்து ஆராதனையில் பங்கேற்றனர்.

News March 29, 2024

மோடியின் கொத்தடிமையாக செயல்படும் தேர்தல் ஆணையம்

image

 ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமை கைப்பாவையாக செயல்படுகிறது. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி ரூபாய் சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். எனவே ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

News March 29, 2024

தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

image

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் , சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது. அதன்படி,  மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம் , மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் – வண்டலுார் சாலை, வி.ஐ.டி.,கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.

News March 29, 2024

புதுவை: முதன்முறை வாக்காளர்கள் 28,921 பேர்

image

புதுவை தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவைக்கு ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். மேலும் 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தர உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ரூ.3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.3.51 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முதல்முறை வாக்காளர்கள் 28,921 பேர் என்று கூறினார்.

News March 29, 2024

குறும்படத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்பு படம் திரையிடப்பட்டது. அதனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் சஜீவனா பழங்குடியினர் மக்களுடன் அமர்ந்து குறும்படத்தை பார்வையிட்டார்.

News March 29, 2024

அமமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

image

ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் இன்று மாலை 5.30மணி அளவில் அதிமுகவிலிருந்து விலகி அமமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அமமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

ஈரோட்டில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம்

image

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

ஈரோட்டில் 2 நாட்களுக்கு தடை

image

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நாளை (மார்ச் 30) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 31) ஆகிய நாட்களில் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எனவே இந்த 2 நாட்களில் ஈரோடு மாவட்ட காவல் எல்லையில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!