India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில் – கோவை ரயில் மார்.30, 31, ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கோவை- நாகை ரயில் மார்.30, 31, ஏப்.1ஆம் தேதிகளில் நெல்லை – நாகை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ்-க்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். உடன் அதிமுக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், தேமுதிக ஒன்றிய செயலாளர், அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இருந்தனர்.

வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை இது குறித்து திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இச்செயலை கண்டித்து காங்கிரஸ், போராட்ட களத்திலும் இறங்கி இருக்கிறது. இதனால் தேர்தல் வரும் முன்பே எதிரியின் முதுகெலும்பை உடைத்துக் களம் காண்பது கோழைத்தனம் என்று
விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று (30/03/24) வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ”ஆற்றுப்படை அறக்கட்டளை” இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை தென்காசி பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் என்பவர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு பின் கட்சி தலைமை தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனவும் , நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பாததால் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்களுக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இரண்டாம் சுதந்திரப் போர். இதில் இந்திய மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். மேலும், பாஜக பட்டியலின மக்களுக்கு எதிரானது என்பதை தற்போது உணர்ந்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் மத்வ சித்தாந்த சபாவில் நாளை 31.1.2024 திருச்சி மாவட்ட எலக்ட்ரிஷன் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே எலக்ட்ரீசியன், டெக்னீசியன் நிர்வாகிகள் ஒன்று திரண்டு உரிமைகளை மீட்போம் என சங்க குழு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.