India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி, ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மணல்மேடு மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஏப்ரல்-2) நடைபெறுகிறது.
இதனால், கல்மண்டபம், பண்டசோழநல்லூர் (ஒரு பகுதி), வடுகுப்பம், பனையடிகுப்பம், கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா அருகில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் “எடப்பாடி” பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் டாக்டர். பசுபதி அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர், அம்மன்காவு கிராமத்தில் இருந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வழியுறுத்தி கொளப்பள்ளியில் இருந்து சைக்கிள் பயணமாக கன்னியாகுமரி சென்று அங்கிருந்து லடாக் ,நேபாளம் வரை சைக்கிளில் பயணம் செய்ய உள்ள ஶ்ரீ சிவ பிரகாஷ் என்ற இளைஞர் இவரின் பயணத்திற்க்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்கும் விதமாக ஐந்து மண்டலங்களிலும், கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள், 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள், அகற்றினர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,91,67,955 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 52 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு ரூ. 1,44,91,265 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 21,50,82,357 மதிப்பிலான தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக திருச்சிலுவை கொடியானது ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இசை முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட கரிகாலன் என்பவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் ரூ. 50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும். இதற்கிடையில் 19ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு நாள் அது தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாள் என்றும், வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதி அனில் அம்பானியின் பிறந்தநாள் என்றும் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் வாக்கு சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் M.S.தரணிவேந்தனின் வாகனத்தை நேற்று(ஏப்.1)தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.