India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோட்டூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இம்மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு மனுதாரர் மனுவை சிவகங்கை கலெக்டர் பரிசீலனை செய்து நாளைக்குள் உரிய உத்தரப் பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி (ம) கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.அரங்கநாதன் உள்ளனர்.

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் சிறிய வகை வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே திறக்கப்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் செல்வதால் மேம்பாலம் பாதிக்கும் வகையில் உள்ளது. நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வலியுறுத்தி பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/04/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பொட்டா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு கூட்டுறவு பண்டக சாலை அருகே கூட்டுறவுத்துறை மூலம் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. தற்பொழுது ஏப்ரல் ஒன்று முதல் 5ஆம் தேதி வரை புதிய கணக்கு தொடங்க இருப்பதால் கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகள் ஆடிட்டர் மூலம் தாக்கல் செய்யப்பட இருப்பதால் அதுக்குள்ளான பணிகள் நடைபெறுகிறது. இதனால் அம்மா மருந்தகம் ஏப்ரல்-1 முதல் ஏப்ரல்5-ம் தேதி வரை மூடப்படும் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படைகள் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் மற்றும் நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மேற்கொள்ளும் கண்காணிப்பு பணிகளையும் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-01) மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் கிகேட்டோ சேம மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.

ஈரோடு எஸ்கேசி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவியர்களிடம் மக்களவைத் தேர்தலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் கலந்து கொண்டனர்

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிபுரம் பேரூராட்சி ஆதிபட்டி பகுதியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (ஏப்.1) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.