Tamilnadu

News March 19, 2024

வேலூர்: மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 19, 2024

காஞ்சிபுரம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

image

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News March 19, 2024

நாமக்கல் அருகே  பலியான 27 உயிர்கள் 

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

News March 19, 2024

முதியவர்களுக்கு எண் வெளியிட்ட நெல்லை காவல்துறை

image

நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து புகார் மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரடியாக சென்று கொடுக்க வேண்டியது இல்லை. மாறாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அலைபேசி எண் 9498181200 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களது புகாரை தெரிவிக்கலாம் என மாநகர காவல் துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

image

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2024

சென்னை: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை தேடிவருகின்றனர்.

News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 19, 2024

புதுச்சேரியில் வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோய்

image

புதுவையில் மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், கழுத்துக்கு மேற்புறமாக காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் உருவாகி கடுமையான வலி காய்ச்சல் உருவாகும். இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். இதற்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புதுவை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.

error: Content is protected !!