Tamilnadu

News March 25, 2024

தருமபுரியில் யார் யார் இன்று மனு தாக்கல்!

image

மக்களவை பொதுத்தேர்தல்-2024, ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் இன்று(மார்ச் 25) தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணி மற்றும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

News March 25, 2024

வெள்ளியங்கிரி மலையில் 2 பேர் உயிரிழப்பு

image

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று (மார்ச்.24 ) கிரிமலை யாத்திரை சென்ற சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் உயிரிழந்தார். இதேபோல் ஹைதராபாத் சென்ட்ரல் பகுதியை சுப்பா ராவ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

பாஜக வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான எம்எல்ஏ நயினார் மகேந்திரன் இன்று (மார்ச் 25) பகல் 12 மணிக்கு தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்கிறார், இதில் பாஜக கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

நெல்லைக்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை (மார்ச் 27) மாலை 6 மணிக்கு டவுன் வாகையடி முக்கில் நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

News March 25, 2024

அதிமுகவில் ஐக்கியமான மாற்று கட்சியினர்

image

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சாயல்குடி அருகே இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக, அமமுக கட்சியினர் மற்றும் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆகியோர் முன்னிலையில்
அதிமுகவில் நேற்று மாலை இணைந்தனர். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றிக்கு உழைப்பதென உறுதி ஏற்றனர்.

News March 25, 2024

ஈரோடு : பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். எனவே ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 120 கண்காணிப்பு கேமரா போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!