Tamilnadu

News March 25, 2024

சேலம்: முன்னாள் அமைச்சர் நினைவிடத்தில் மரியாதை

image

சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி பூலாவரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவு இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் என பலர் கலந்து கொண்டனர்

News March 25, 2024

சேலம்: தொகுதி வாரியாக பிரிக்கும் பணி தீவிரம்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) ஆகியவற்றை சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இப்பணியினை ஆய்வு செய்தனர்.

News March 25, 2024

விக்கிரவாண்டி பைக் விபத்தில் பெண் பலி

image

திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கௌசல்யா, மாமியார் பாக்கியலட்சுமியுடன் நேற்று (மார்ச் 24) பைக்கில் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராமல் வேன் மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2024

வேலூர் 45 லட்சம் பறிமுதல் கலெக்டர் தகவல்

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (மார்ச் 24) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 45,28. 260 ரொக்கப்பணமும், 281 மதுபாட்டில்களும், 634  பட்டு சேலைகளும், சுடிதார் ஆடைகளும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

தாராபுரம் அருகே சாலை விபத்தில் இரண்டு பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொரு பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் பழங்குடிகள்

image

தமிழ்நாட்டில் வாழும் கொண்டா ரெட்டி இன மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம் என திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டி மலை ஜாதி முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. எஸ் டி பிரிவினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

காஞ்சிபுரம்: ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்

image

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று வரை ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 6 பேர் வேட்புமனுக்களை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வியிடம் அளித்தனர்.

News March 25, 2024

திருவாரூர்: வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

ஏப்ரல்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் அனைவரும் 100 % வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

மதுரையில் ஒரே நாளில் 6 இளம்பெண்கள் மாயம்!

image

மதுரையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 6 இளம்பெண்கள் நேற்று ஒரே நாளில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளிக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகரத்தினம் 17, திருப்பாலையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா 18, ஒத்தக்கடையை சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயா 18, மேலூரை சேர்ந்த மகாலட்சுமி 23, உள்ளிட்ட 6 பேர் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

News March 25, 2024

நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

image

இன்று கரூரில் நம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பு மனுவை ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பாளர் கருப்பையா வழங்கினார். இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் 25க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

error: Content is protected !!