India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு, பொதுப் பாா்வையாளரான கிகேட்டோ சேமவை 93639 70331 என்ற எண்ணிலும், தேர்தல் செலவினங்கள் தொடா்பாக செலவின பாா்வையாளரான ஜன்வி திவாரியை 93639 62884 என்ற எண்ணிலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களுக்கு காவல் பாா்வையாளரான சரணப்பாவை 93639 72586 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மன்றம் தொடக்க விழா மற்றும் தெற்காசியாவில் இமயமலை நதிநீர் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் புருஷோத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றிரவு (மார்ச் 26) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே வந்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் வேலூர் எம்பி வேட்பாளர் கதிர் ஆனந்த் உடன் இருந்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை
மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தலைமையில் இன்று(27.03.2024) ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலில் 100 ஓட்டுப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் பொதுப்பார்வையாளர் செல்வி ஹர்ஜித் கவுர் இ.ஆ.ப தேர்தல் செலவினப்பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை சார்பில் இன்று தடகள விளையாட்டுப் போட்டிகளை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார். உடற்கல்வி தலைவர் ராஜசேகரன் தலைமை உரையாற்றினார் பல்கலைக்கழக அனைத்து துறை சார்ந்த மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நாளை போட்டியில் வென்றவருக்கு துணைவேந்தர் தலைமையில் பரிசு வழங்கப்படும்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் இருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு பேரணியை இன்று (27.03.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.