India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலியில் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகே உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக தற்போதைய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று (மார்ச் 28) தாளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒகேனக்கல்லை சேர்ந்த ராஜம்மாள் 56, இவரது தம்பி காமராஜ் 54. இருவருக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராஜம்மாளை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கு தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் காமராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து காமராஜுக்கு ஆயுள் தண்டனை & 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.

நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கிராந்தி குமாரிடம் கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலாளர் க.பாலாஜி இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவையில் 108 அவசர ஊர்திகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற முடிவதில்லை. எனவே தபால் ஓட்டுரிமையை எங்களுக்கும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 30 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் – சுதா , அதிமுக – பாபு , பாமக – ம.க. ஸ்டாலின் , நாம் தமிழர் கட்சி காளியம்மாள் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என – 35 மனுக்கள் பெறப்பட்டது. இதில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 18 மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் , 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறை கண்காணிப்பு குழுவினர் சுற்றுலாப் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் போது, பயணச்சீட்டு, ஹோட்டல் ரூம் புக்கிங் விபரங்களை சரிபார்த்த பின்னர், செலவிற்காக தொகை வைத்திருந்தால், முழு தொகையும் பறிமுதல் செய்யக்கூடாது எனவும், கைச்செலவுக்கு ரூ.10,000 யை தவிர்த்து மீதமுள்ள தொகையை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வரை 30 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைவரின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது .இதில் தேமுதிக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் கட்சி போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையில் வேட்பாளர்கள் கொடுத்துள்ள சொத்து விவரம் மற்றும் ஆவணங்கள் குறித்து பரிசீலனை நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.