Tamilnadu

News March 29, 2024

மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

image

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ், பாஜக வேட்பாளா் தி. தேவநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரஞ்சித்குமாா் பாலுசாமி மற்றும் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News March 29, 2024

4 புதிய ரயில் பெட்டிகள்

image

நீலகிரியில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று (மார்ச்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக நேற்று 4 புதிய ரயில் பெட்டிகள் குன்னூர் கொண்டு வரப்பட்டன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 4 பெட்டிகள் ஊட்டி- கேத்தி இடையே இயக்கப்படும் என கூறினார்.

News March 29, 2024

தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் கிராந்தி  குமார் பாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் 94896-87740, 94862-68740, 94896-81740 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News March 29, 2024

கிருஷ்ணகிரி அருகே குவிந்த மக்கள்  

image

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News March 29, 2024

வழிமறித்த காட்டு யானை – அலறிய பயணிகள்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது சாலையின் நடுவே குறுக்கிட்டு பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒற்றை யானை திடீரென
சாலையில் நடுவே நின்று பேருந்தை வழிமறித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன் நின்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் தானாகவே சென்றது.

News March 29, 2024

புதுக்கோட்டை பெட்டிகடையில் 25 கிலோ புகையிலை பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News March 29, 2024

நெல்லை: குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2024

சேலம்: ட்ரோன்கள் பறக்க தடை

image

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளமான வாட்சப் மற்றும் மெஸ்சேன்ஜர் பக்கங்களில அரசு உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகளின் படங்களை (profile picture) ஆக வைத்து ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.  குற்றவாளிகள் அதிகாரிகள் போல பேசி பணம் கேட்டு ஏமாற்றி வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனமுடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 29, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க..!

image

தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!