India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க 260 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பரப்புரை இன்று நடைபெற்று வரக்கூடிய நிலையில் ,கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.

சமாதானபுரம் உப மின் நிலைய பகுதி வி எம் சத்திரம் அலுவலகத்திற்கு உட்பட்ட நெல்லை தூத்துக்குடி சாலையில் உள்ள மின் கம்பம் அருகே இன்று (ஏப்ரல் 17) காலை மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது சரிந்து விழுந்தன. இதனால் மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மின் தடை செய்து மரக்கிளைகளை அகற்றி தடையற்ற மின் விநியோகம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூர் ஏரியில் மணல் கோரை விடப்படுவதாகவும் அதற்குரிய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவள்ளூர் வி சி க முன்னாள் மாவட்ட தலைவர் கோபி நயினார் தலைமையில் பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் காட்டூர் ஏரியில் குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதுகாத்திட ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் ENT (காது தொண்டை மூக்கு) மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவரை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ராமநாதபுரம் நகரில் இன்று மதியம் பிரசார வாகனத்தில் ஊர்வலம் சென்று வாக்கு சேகரித்தார். அரண்மனை பகுதியில் துவங்கி வழிவிடும் முருகன் கோவில், வண்டிக்காரத்தெரு , சிவன் கோயில் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து இன்று(ஏப்.17), தி.மலை நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் மூலம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது திமுகவினர் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை, மாலை மற்றும் வெற்றிவேல் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 முதல் வரும் 19ஆம் தேதி இரவு 12 வரை மூடப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.