India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மரக்காணம் அருகே போதைப்பொருள் பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 85 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஈபி சாலையை சேர்ந்த ரவிச்சந்திரன் (58) மற்றும் அவரது மகன் அரவிந்த் குமார் (31) ஆகியோரை கைதுசெய்தனர். ஆட்சியர் உத்தரவின்பேரில் இருவரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

திருச்சி வெப்பநிலை உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். அளவுக்கு அதிகமான வெப்பநிலையை உடல் தாங்கிக் கொள்ள முடியாத போது தலைவலி சோர்வு மயக்கம் போன்றவற்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ,படுக்கை வசதியுடன் கூடிய புதிய வார்டு தயார் நிலையில் உள்ளது. என்று திருச்சி தலைமை மருத்துவர், செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 16) திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவர்களால் செதுக்கப்பட்டவை. இன்று(ஏப்.18) உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் இலவசமாக பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மாலை நட்சத்திர கலை சங்கமம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது , ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. எனவே கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்தலில் தக்கலை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஜெஃபினோ நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று(ஏப்.17) பொறுப்பேற்று கொண்டார். இவர் தக்கலை வடக்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். காங்கிரசார் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று(ஏப்.17) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார். சில மணி நேரத்திற்கு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், “ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்..” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பேரணாம்பட்டு கோட்டை காலனியை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக சரண்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நேற்று (ஏப்ரல் 17) கலெக்டர் சுப்புலட்சுமி சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கோவையில் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ராமா் படத்துடன் தாமரை சின்னத்தை அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதாக நேற்று பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற பறக்கும் படையினர் பாஜகவினரிடமிருந்து தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ராமா் படங்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Sorry, no posts matched your criteria.