Tamilnadu

News April 18, 2024

சிவில் சர்வீஸ் தேர்வில் 3 பேர் சாதனை

image

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சுபதர்ஷினி(30) 83 ஆவது இடம்,ஆசிக்உசேன்(25) 845 ஆவது இடம், ஓவியா 796 ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

News April 18, 2024

ஈரோட்டில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

News April 18, 2024

மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும் 20 ஆம் தேதி தூத்துக்குடி ஜேஎம்சி கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

பதற்றமான சாவடிகளில் சிசிடிவி பொருத்தும் பணி நிறைவு

image

நெல்லை மக்களவைத் தொகுதியில் 1,197 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், கூடுதலாக பாதுகாப்பு படையினரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய தின (ஏப்.18) நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

தேனி தொகுதியில் 25799 இளம் வாக்காளா்கள்

image

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆண்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 529 பெண்கள், 219 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளர்களாக உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 14,193 ஆண்கள், 11,602 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 25,799 இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

News April 18, 2024

வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம்

image

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளிலிருந்து அரசியல் கட்சியினர் 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை வலியுறுத்தும் வகையில் மதுரை மேல வெளி வீதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வரும் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று பெயிண்டால் அடையாளபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 18, 2024

தஞ்சாவூர்: 2,661 மது பாட்டில்கள் பறிமுதல்; 38 பேர் கைது

image

தேர்தல் நேரத்தில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன்படி, ஏப்.15ம் தேதி முதல் நேற்று(ஏப்.17) வரை நடந்த சோதனையில் 2,661 மது பாட்டில்கள், 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

News April 18, 2024

1788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குபதிவு

image

தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 888 இடங்களில் மொத்தம் 1788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாளை (ஏப்.19) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது.

News April 18, 2024

நீலகிரி: ஒரு குடம் தண்ணீர் 20 ரூபாய்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின்றி அணைகள் வறண்டு வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் நகர கடைகளுக்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பலர் தங்களது கிணற்று நீரை தள்ளுவண்டியில் கொண்டு சென்று சப்ளை செய்வதால், வியாபாரிகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது.

News April 18, 2024

ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள்

image

நாளை (ஏப்.19) நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் வசித்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை மட்டுமின்றி கடமையும் ஆகும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!