Tamilnadu

News April 21, 2024

திண்டுக்கல் அருகே இறைச்சி விற்பனை

image

பழனி, சின்னகலையம் புத்தூர்,சிவகிரிபட்டி பகுதிகளில் இறைச்சி கடைகள் இன்று திறந்து விற்பனை நடைபெறுகிறது.மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் திறக்க இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி இறைச்சிக் கடைகள் திறந்து விற்பனை செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் , ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 21, 2024

மலை ரயில் ரத்து; பயணிகள் ஏமாற்றம்

image

நீலகிரியில் மலை ரயில் பயணம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது.. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

News April 21, 2024

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி சாதனை

image

இந்தியாவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது.

News April 21, 2024

கோவை – பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

image

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

சித்திர பௌர்ணமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் வருகின்ற 23ம் தேதி சிந்துபூந்துறை தாமிரபரணி ஆறு தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பகல் 12:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தீர்த்த வாரி மண்டபத்தில் அடைவர். அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

ஆலத்தூர் அருகே மது விற்றவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே காரை பிரிவு ரோடு அருகில் நேற்று மாலை(ஏப்.20), கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 92 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News April 21, 2024

கள்ளக்குடி: தேர்தல் புறக்கணிப்பு-வெளியான முக்கிய தகவல்

image

கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

ராமநாதபுரம்; ஒபிஎஸ் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

image

நாடு முழுவதும் இன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, “அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டி வாழ வேண்டும் என்கிற அறநெறியைப்
பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இந்த இனிய நாளில்,அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்போம்” என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

விருதுநகர் அருகே பெண் மீது தாக்குதல் 

image

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர் வந்து மனைவி நாச்சி (46). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டியதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் தங்கப்பாண்டி குடும்பத்தார் ஐந்து பேர் சேர்ந்து நாச்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. டவுன் போலீசார் நேற்று ஏப்ரல் 20 வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2024

திருச்சி அருகே விபத்து;மரணம் 

image

அரியமங்கலத்தை சேர்ந்த தனுஷ்ராஜ் (22). தனது நண்பரான தென்னூர் பாரதி நகரை சேர்ந்த மணிகண்டனுடன் நேற்று டூவீலரில் சென்றபோது, எதிரில் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சரண் (22), தனது நண்பரான சச்சினுடன்(22) டூவீலரில் வந்த டூவீலர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த தனுஷ்ராஜ் , மணிகண்டன், சச்சின் ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார் .

error: Content is protected !!