India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருமருகல், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த விளைநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவு இன்று மதியம் ஆரம்பமாகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வரும் மே மாதம் 18ம் தேதி வரை இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை ஏ சி டி நகர் பகுதியில் வசித்து வந்தவர் போத்துராஜ், மனைவி கமலா தேவி (81). இவர் உடல்நிலை சரியில்லாமல் மயக்கம் ஏற்பட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கமலாதேவி மகன் விவேகானந்தன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் நேற்று மாலை நண்பர்களுடன், முடுக்கன்துறை – பவானி ஆற்றில் குளித்த போது நந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த பவானிசாகர் தீயணைப்புதுறையினர் நந்தகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகியும் நந்தகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையும் நந்தகுமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக vs பாஜக vs அதிமுக vs நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியது.

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதால்,நாமக்கல் சுற்றுவட்டார கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.மேலும் தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

விருத்தாசலம் அடுத்த சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (38).நேற்று பெரியவடவாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்று விட்டு நேற்று மாலை 4 மணி அளவில் பெரியவடவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.இப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி வெங்கடேசன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

லால்குடி அருகே நன்னிமங்கலத்தை சேர்ந்த அருண்ராஜ் (40). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த தயாளன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் தயாளன் அவரது நண்பர்கள் 5பேருடன் சேர்ந்து அருண்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜோஸ்மோன், நண்பர்கள் விஜின், சுஜின் உள்ளிட்டோருடன் மதுக்கரையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே டூவீலர் நிறுத்துவதில் அப்பகுதியை சேர்ந்த தனுஷ் குமாரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜின் அடித்து கொல்லப்பட்டார். இப்புகாரின் பேரில் தனுஷ் குமார், சிறுவன் உட்பட 10 பேர் கும்பலை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.