Tamilnadu

News April 24, 2024

கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

image

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி படகுகளை இழக்கும் அவல நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கடலோரப் பகுதிகளில் கூண்டு வலையில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாம்பன், குந்துகால், மண்டபம் தோணித்துறை, ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் சில மீனவர்கள் கூண்டு வைத்து மீன்பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

News April 24, 2024

உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி முகாம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த SC/ST மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் என் கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த பணிமனை பயிற்சி முகாம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

நந்தி சிலையை காண குவியும் சுற்றுலா பயணிகள்

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.660 அடியாக குறைந்ததால் நீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை முழுதும் வெளியே தெரிகிறது. இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பண்ணவாடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையை காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

News April 24, 2024

புதுவை துணை செயலாளருக்கு முன்னாள் முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி மாநிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரின் வீட்டில் இன்று சந்தித்து‌ பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் ஆசி பெற்றார்.

News April 24, 2024

நாகை: பாலம் கட்டும் பணி தீவிரம்

image

நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சிக்கு உட்பட்ட காருகுடி சின்ன வடக்குவெளி பகுதியில், சிறு பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலின் கோரிக்கை சிறுபாலம் கட்டும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடியும் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் கேரளாவில் பிரச்சாரம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான புரூஸ், கேரள மாநிலம் ஆற்றிங்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அடூர் பிரகாசை ஆதரித்து இன்று (ஏப்ரல் 23) தீவிர பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

News April 24, 2024

வடகொரியாவின் முன்னோட்டம்-அமைச்சர் பி.டி.ஆர்

image

வடகொரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சூரத் தொகுதியில் காங். வேட்பாளர் மனுவை நிராகரித்து விட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவித்துள்ளனர். சூரத்தில் பாஜக வெற்றியை சர்வாதிகார ஆட்சி நடக்கும் வடகொரியாவுடன் ஒப்பிடுவதாக பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

அரசு மருத்துவமனையில் திருட்டு, பிளம்பர் கைது

image

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மின் பணிக்காக பொருட்கள் இருப்பு அறையில் செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பிகள் அடிக்கடி திருடு போனது. இது குறித்து பந்தய சாலை காவல்துறையினர் நடத்தி நேற்று (ஏப்ரல்.22) அங்கு பிளம்பராக வேலை பார்த்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெயதாஸ் (28) என்பவர் திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 24, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு, கோயிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (23.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 24, 2024

கள்ளக்குறிச்சி: சோதனையில் ஈடுபட்ட போலீசார்

image

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் இன்று சுமார் 1/4 மணி நேரத்திற்கு மேலாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவ்வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

error: Content is protected !!