India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். அதில் 15,230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என மொத்தம் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியை வழங்கினார்.

கோவையில் காற்றுடன் கூடியமழை பெய்துவருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேமராக்களுக்கு யுபிஎஸ் மின்சாரத்தை சீராக வழங்கக்கூடிய கருவிகள் இன்று பொருத்தபட்டது . இதனால் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து 5 கிலோ தங்கத்தை ராமேசுவரத்துக்கு படகு மூலம் கடத்தி வந்து, அதை மதுரைக்கு காரில் கொண்டு வருவதாக நேற்று மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைமான் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட வருவாய் புலனாய்வு பிரிவினர் காரில் 5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 5 பேரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெற்கு வாயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 90 அரசு மற்றும் பள்ளியைச் சேர்ந்த 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதன்படி நான்கு அரசு பள்ளிகள், ஒன்று நகரவை பள்ளி, ஒன்று பகுதி பெரும் பள்ளி, 75 மெட்ரிக் பள்ளிகள், ஒன்பது சுய நிதி பள்ளிகள் என 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

போக்குவரத்துத்துறை புள்ளி விபரங்களின்படி கோவையில் இ-வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது. நாளொன்றுக்கு, 25க்கும் அதிகமாக இ-வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கேற்ப இ-வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும் 34 ஆக அதிகரித்து வருகிறது. திருச்சி, அவிநாசி, பாலக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் புதிதாக சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் ஐந்து அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி நேற்று பெற்றது. சூரியம்பாளையம் எஸ் முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவர்கள், 13 மாணவிகள் என 31 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேபோன்று புது ராமகிருஷ்ணாபுரம் நகரவை மேல்நிலைப் பள்ளியில் 152 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சென்ட்ரல்- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, தொழில்நுட்ப கோளாறுகளை ஊழியர்கள் சரி செய்த நிலையில், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீராக இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இங்கு சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி வரை 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் 23-24 ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர்கள் விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அளப்பரிய பங்களிப்பை செய்த தனி நபர்கள், ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றோருக்கு ஆண்டுதோறும் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Sorry, no posts matched your criteria.