Tamilnadu

News May 30, 2024

விருதுநகர் அருகே தாக்குதல்

image

விருதுநகர்,கமுதி அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி(52).இவரது குடும்பத்தாருக்கும் திருச்சுழி அருகே அம்மன் பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அம்மன் பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.திருச்சுழி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News May 30, 2024

நாமக்கல்லில் கனமழை வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

News May 30, 2024

திருச்சியில் கனமழை…!

image

தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

News May 30, 2024

கோவையில் இருந்து நேரடியாக வெளிநாடுகள் செல்லலாம்

image

கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து டில்லி மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள 5 நகரங்களான நியூ ஆர், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ கனடாவில் உள்ள வான்குவார் செல்ல முடியும் என்றனர்.

News May 30, 2024

சிவகங்கை மானாமதுரையின் கடம் சிறப்பு!

image

சிவகங்கை, மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடம் உலகளவில் இசைக்கலைஞர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து தயாரிக்கின்றனர்.

News May 30, 2024

லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவு சார்பதிவாளர் கைது

image

மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 30, 2024

மதுரை: டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

image

மதுரையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஓட்டிய புகாரில் டிடிஎஃப் வாசன் நேற்று கைது செய்யப்பட்டார். டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 30, 2024

தேனியின் சின்ன சுருளி அருவி சிறப்பு!

image

தேனியில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது சின்ன சுருளி அருவி. மேகமலைப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் இந்த அருவி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் சீசன் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். நீர் வரத்தை தெரிந்து கொண்டு அருவிக்கு செல்வது நல்லது. பிரபலமடையாத சுற்றுலாத் தலமாக இருப்பதால் தங்கும் வசதிகள் இல்லை. அதற்கு ஏற்றார் போல் தயார் நிலையில் இந்த அழகிய அருவிக்கு வருகை தரலாம்.

News May 30, 2024

புதுச்சேரியில் குறும்படத் திருவிழா

image

புதுவை அறிவியல் இயக்கம் மற்றும் பாண்டிச்சேரி அலையன்ஸ் ஃபிரான்சிஸ் ஆகியவை இணைந்து ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் 2 நாள் சிறாா் குறும்பட திருவிழாவை நடத்த உள்ளன. புதுச்சேரி அலையன்ஸ் ஃபிரான்சிஸ் கலையரங்கத்தில் 13 வயது முதல் 18 வயதுள்ள சிறுவா்களுக்கான குறும்படம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திரையிடப்படும். இதற்கு அனுமதி இலவசம்.

News May 30, 2024

கடலூர் மாவட்ட தடகள கழகத்தின் சார்பில் முகாம் 

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகளத் கழகத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் கடந்த 15 நாட்களாக நடந்து முடிந்தது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இவர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய ஹேண்ட்பால் மகளிர் அணியின் பயிற்றுநர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!