India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை
 நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 2,000 டன் நெல், தனி சரக்கு இரயிலில், நேற்று ஈரோடு வந்தது. இதனை நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் இவை அரைக்கப்பட்டு புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செடி முருங்கை கிலோ ரூ.65 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.18க்கு விற்றது. முருங்கை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார், திருச்செந்தூர் வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 17) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் 94 லிட்டர் கள்ளச்சாராயம், 262 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் நேற்று(மார்ச் 17) பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.