Tamilnadu

News March 21, 2024

தென்காசி பாஜக அலுவலகத்தில் சமகவினருக்கு வரவேற்பு

image

தென்காசி சட்டமன்றத் தேர்தல் அலுவலகத்தில் இன்று மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.        நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட சமத்துவ கட்சியின் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நகர நிர்வாகிகளை பாஜகவினர் வரவேற்றனர்.

News March 21, 2024

ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

image

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

News March 21, 2024

கோவை ஈஷாவில் மாயமான 6 பேர்?

image

கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசியை சேர்ந்த திருமலை என்பவர் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய தனது சகோதரர் கணேசன் காணாமல் போயுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

News March 21, 2024

தஞ்சாவூர்: ஆட்சியர் முதல் கையெழுத்து

image

தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள் , வாக்களித்து ஜனநாயகததை காப்பாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்து இட்டனர். பின்னர் தொடங்கிய பேரணியை இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News March 21, 2024

நாமக்கல்: கொடுத்த வனத்துறை

image

உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.

News March 21, 2024

தாராபுரம், காங்கேயம் சட்டமன்றதொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.

News March 21, 2024

அரியலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பது, சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றி, வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News March 21, 2024

ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

News March 21, 2024

குமரி: பெண் மர்ம மரணம் – போலீஸ் விசாரணை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது‌. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!