Tamilnadu

News March 18, 2024

தென்காசியில் எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்!

image

தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.27) தென்காசி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News March 18, 2024

புழல் சிறையில் போக்சோ குற்றவாளி உயிரிழப்பு

image

ஈரோடைச் சேர்ந்த அய்யாவு, (வயது 79) போக்சோ வழக்கில் கைதாகி கடந்த மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அய்யாவுக்கு திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 18, 2024

திருச்சியில் எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்!

image

தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.24) திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News March 18, 2024

சேலத்தில் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை

image

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.2 டிகிரி செல்ஸியஸ்; 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் நாள்தோறும் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News March 18, 2024

விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்படும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

நாமக்கல் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூர்யமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

காஞ்சிபுரம்: 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் , 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால்  அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்

News March 18, 2024

புதுவையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாகனங்கள் ஒப்படைப்பு

image

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் வழங்கப்பட்ட கார்களை ஒப்படைக்க வேண்டும் என பேரவை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு வழங்கிய வாகனத்தை புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றார்கள்.‌

News March 18, 2024

விருதுநகர்: தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது வழக்கு

image

இருக்கன்குடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவர் தனது மனைவி மகேஸ்வரியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மகேஸ்வரி நேற்று அதிக மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மகேஸ்வரி புகாரில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News March 18, 2024

புதுகையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

image

ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டத்தில் நேற்று
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்திருப்பது- சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் நகரில் அரசியல் விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். தனியார் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கடிதம் வேண்டும். இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டும். பிரச்சார அனுமதிக்கு 48 மணி நேரம் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!