India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட மல்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம்-கரூர் ரயில் 06837 இன்று முதல் 30ம் தேதி வரை மாலை 06.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 07.00 மணிக்கு புறப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில், கரூர்-சேலம் ரயில் 06838 கரூரில் இரவு 07.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 09.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் (ச.ம.தொ) தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ராதிகா தலைமையிலான குழுவினர் கண்டப்பன்குறிச்சி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் ராஜேஷ் குமார் (35) என்பவர் 79 ஆயிரத்து 665 ரூபாயை எவ்வித ஆவணமுமின்றி வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து துணை தாசில்தார் கோவிந்தனிடம் ஒப்படைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். மாவட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி மற்றும் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து மாலை 5 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

வெள்ளாளவிடுதி ஊராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று கறம்பக்குடி- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம் சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வராஜ் தலைமையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த கனிவண்ணன் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ புளியங்குடி நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி ஆகியோர் புளியங்குடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் நகரத் தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் ஆறு சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதியில் திமுக சார்பில் செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் என 4 முனை போட்டியாக காஞ்சிபுரம் தொகுதி களம் காண்கிறது. நான்கு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 23) நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேட்பாளர் பசுபதியை அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னையில் நோன்பு கஞ்சி குடிக்கும்போது பல் செட்டையும் சேர்த்து மூதாட்டி ஒருவர் விழுங்கியுள்ளார். உடனே மூதாட்டியின் உறவினர்கள் அருகிலுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். நேற்று மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பல் செட்டை வெளியே எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர் .
Sorry, no posts matched your criteria.