Tamilnadu

News March 25, 2024

திருப்பூர்: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.

News March 25, 2024

விழுப்புரம்: கானா பாடகர் மீது தாக்குதல்

image

திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கானா பாடகர் நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். ஜக்காம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அன்பு தனது சொந்த வேலை காரணமாக மேல்மருவத்தூர் சென்று திரும்புகையில் சலவாதி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை ரோசனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2024

கிருஷ்ணகிரி: உலக நலனுக்காக திருவிளக்கு பூஜை

image

தமிழ்நாடு பிராமண சங்கம் ஓசூர் கிளை சார்பில் சுவா சினி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து ஆரம்பித்த இந்த பூஜை கன்யா பூஜை, குத்துவிளக்கு பூஜை, சுவாசினி பூஜையுடன் இனிதே நடைபெற்றது. தாம்பிராஸ் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஓசூர் குகை சுவாமிகள் ஸ்ரீ சாக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

News March 25, 2024

தருமபுரி: பாமக நிறுவனர் தலைமையில் ஆலோசனை

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, சமூக ஊடகப் பேரவை (பாமக)மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று(மார்ச் 24) அவரது இல்லத்தில் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், அரசியல் களத்தில் ஊடகப் பேரவையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள் செயல்திட்டங்களை வகுத்து கொடுத்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

சோலைமலை முருகன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

image

அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

News March 25, 2024

சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் மீட்பு

image

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்தார்.

News March 25, 2024

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு 

image

புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

News March 25, 2024

பழனி மலை கோயிலில் ரம்மிய தரிசனம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் இதனை எடுத்து பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது .இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது

News March 25, 2024

திண்டுக்கல்லில் 14 பேர் கைது

image

திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, வேடசந்தூர், ஆத்தூர், விளாம்பட்டி, எரியோடு, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்ற கருணாநிதி (49), பெருமாள் (47)ரவி (47), சதீஷ்குமார் (38), முருகன் (63), முருகேசன் (43), விஜயன் (56), பால்ராஜ் (36), இளையராஜா (35), மாரியப்பன் (45), சிலம்பரசன் (34), செல்வம் (61),அழகு ராஜபாண்டி (36), சேவுகன் (58) 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 25, 2024

ஈரோடு : ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார்

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, பேசுகையில் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார் ஆனால் ஒரு சவரன் கொடுப்பார் என தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!