India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் அமமுக தமாக புதிய நிதி கட்சி இந்திய ஜனநாயக கட்சி தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள பெரியார் அரசு கலை கல்லூரி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் உடனடியாக அமைக்க வலியுறுத்தினார்.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று காலை காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை குடிநீர் வாரியத்துக்கு, நிகழாண்டின் 2ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணங்களை செலுத்த ஏதுவாக, வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அனைத்து வசூல் மையங்களும் செயல்படும் என சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி, சில்லப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகஜோதி(37). இவர் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுவை வழங்கினார்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ, வேட்பாளர்கள் முகமது முபாரக் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் பெயரில் ரூ.4.54 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.4.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், தனது மனைவி பெயரில் ரூ.6.28 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியரும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்கு மேஜைகளில் பதிவெண்கள் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி, பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12,038 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வளர்மதி நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயரில் ரூ. 4.69 லட்சம், மனைவி பெயரில் ரூ.7.28லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.14 லட்சம் மதிப்பிலான பூர்விக அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது பெயரில் ரூ.3.10 லட்சம், மனைவி பெயரில் ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.7.85 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
Sorry, no posts matched your criteria.