Tamilnadu

News March 30, 2024

மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

News March 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

வேலூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

image

வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 30, 2024

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டவர் வாபஸ்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் என்பவர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு பின் கட்சி தலைமை தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனவும் , நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பாததால் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

திருச்சியில் திருமாவளவன் பேட்டி.!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்களுக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இரண்டாம் சுதந்திரப் போர். இதில் இந்திய மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். மேலும், பாஜக பட்டியலின மக்களுக்கு எதிரானது என்பதை தற்போது உணர்ந்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

News March 30, 2024

திருச்சி: எலக்ட்ரீசியன் சங்க கூட்டம் அழைப்பு

image

திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் மத்வ சித்தாந்த சபாவில் நாளை 31.1.2024 திருச்சி மாவட்ட எலக்ட்ரிஷன் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே எலக்ட்ரீசியன், டெக்னீசியன் நிர்வாகிகள் ஒன்று திரண்டு உரிமைகளை மீட்போம் என சங்க குழு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

புதுச்சேரியில் 2-வது நாள் நடந்த குதிரையேற்ற போட்டி

image

ஆரோவில்லில் உள்ள ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 25-வது தேசிய குதிரையேற்ற போட்டி 28-ந்தேதி தொடங்கியது. 2-வது நாளான நேற்று 110 செ.மீ, 120 செ.மீ. உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

News March 30, 2024

திருச்சியில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

image

திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற பொது தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை சட்டவிரோதமாக முடக்கிய பாஜக அரசை கண்டித்து, பதாகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

News March 30, 2024

தென்காசி: மக்களின் பிரச்சினைக்கு தீர்வு 

image

தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் ஸ்கூல் சொசைட்டி அருகில் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து கண்டறிந்து அதற்கான தீர்வு காண வழிவகுப்பேன் என்று உறுதி கூறினார்.

News March 30, 2024

நாமக்கல்: ரோட்டரி சங்கம் வழங்கிய தையல் இயந்திரம்

image

நாமக்கல் இரத்தினசாமி சுற்றுச்சூழல் கிராமிய வளர்ச்சி நிறுவனம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்பள்ளி நாடு ஊராட்சி மன்றம் சார்பாக மகளிர்களுக்கு இலவச தையற் பயிற்சி வழங்கப்பட்டது பயிற்சியை சிறப்பாக மகளிர்களுக்கு நடத்தி கொடுத்த எப்சிபா குளோரியை பாராட்டி நாமக்கல் ரோட்டரி சங்கம் சார்பாக இலவசமாக தையல் இயந்திரத்தை மாவட்ட தலைவர் விஸ்வநாதன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!