Tamilnadu

News August 15, 2025

குமரியில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, சொத்த விளை, சின்ன விளை, சங்குத்துறை, வெட்டுமடை, தேங்காய்ப்பட்டணம், மிடாலம் கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளிக்கோணம், அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு அனுமதித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

அரியலூர்: சுதந்திர தின விழாவில் பசுமை விருது

image

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது ரூ.1 இலட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை குமிழியம் மரங்களின் நண்பர்கள் அமைப்பிற்கு வழங்கினார்.

News August 15, 2025

பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தண்டாயுதபாணி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான தண்டாயுதபாணி சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 15, 2025

தி.மலை: வாழ்வில் சிறக்க இங்கு போங்க

image

திருவண்ணாமலை மாவட்டம் எரிகுப்பம் பகுதியில் எந்திர சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும், பொதுவாக இந்த சனீஸ்வரர் கோயிலுக்கு வந்து தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது, மேலும் தொழில் தடை இருப்பவர்களின் தடைகள் நீங்கி தொழில் சிறக்கவும் சிறந்த இடமாக அமைந்துள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News August 15, 2025

விருதுநகர்: கால அவகாசம் நீட்டிப்பு

image

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

ராணிப்பேட்டை: குழந்தை செல்வம் அருளும் முருகர் கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி கீழ்மின்னல் பகுதியில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களும். இந்த கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பதின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்ப வாழ்கை செழிப்போடு அமையும் என்பது ஐதீகம். உங்கள் நன்பர்களுக்கு பார்கிரவும்.

News August 15, 2025

சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

image

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை சேலம் வருகிறார். இதன் காரணமாக, சேலம் மாநகரப் பகுதிகளில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

News August 15, 2025

கள்ளக்குறிச்சி: இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வழி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் அருகே அதுல்யநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 7ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயிலாகும், இந்த கோயிலில் பக்தர்களுக்கு அருள் தரும் சிவன் பெருமானை சனிக்கிழமைகளில் வழிபடுவதன் வழியே இழந்த சொத்துக்கள், அந்தஸ்த்து மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் உடலில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 15, 2025

விழுப்புரம்: கலைத்துறையில் வளர இங்கு போங்க!!

image

விழுப்புரத்திலிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் கிராமம் எனும் பகுதியில் அமைந்துள்ள சிவலோகநாதரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். இத்தலம் குறித்து தேவாரப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள அம்பாலை வழிபடுவதன் மூலம் நடனம், இசையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. கலைத்துறையில் ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

image

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 633 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இசக்கி பாண்டியன் என்பவருக்கு இன்று வழங்கியுள்ளனர்.

error: Content is protected !!