Tamilnadu

News August 28, 2025

புதுவையில் விஜய கணபதி வீதியுலா

image

புதுவையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் பகுதி சடா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் வீதி உலாவில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சட்டப்பேரவை தலைவர் டிராக்டர் ஓட்டி சுவாமி வீதி உலாவினை தொடங்கி வைத்தார்.

News August 28, 2025

தி.மலை மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம்

image

இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மத்திய அரசின் சார்பில் தற்போது தேசிய தரநிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார்,திருவள்ளூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என பொது சுகாதார துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

image

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

News August 28, 2025

சேலம் அருகே நகைக்கடை உரிமையாளர் அடித்துக் கொலை!

image

சுக்கம்பட்டியை சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ் (35). இவர் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நேற்று மது அருந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரமேஷை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 28, 2025

இரவில் சிறுத்தை உலா டிரோனில் கண்காணிப்பு!

image

ஊட்டியில் இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை தெருவில் சுற்றித்திரியும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருகின்றது. இந்நிலையில் ஓல்டு போஸ்ட் ஆபீஸ், வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை நடமாடியதை தொடர்ந்து நேற்று மாலை இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் டிரோன் உதவியுடன் நகருக்குள் சுற்றும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 28, 2025

ஈரோடு 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் உட்பட மற்றும் 7 பேர் பணியிட மாற்றம்.

News August 28, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஆக.28) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் கரூர் கலைக் கல்லூரி அரங்கம், புகலூர் கோம்புபாளையம், கடவூர் வரவனை, அரவாக்குறிச்சி வெங்கடாபுரம் மற்றும் தோகைமலை நாகனூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

News August 28, 2025

தேவையில்லாத செயலிகள்; மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சமூக வலைதளங்களில் வாயிலாக பண மோசடி அதிக அளவு நடைபெறுகிறது. எனவே மொபைலில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். தேவையில்லாத லிங்க்கை ஓபன் செய்ய வேண்டாம். சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளன. அவசரநிலைகளில் பொதுமக்கள் இந்த எண்ணங்களை பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

புதுகை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!