Tamilnadu

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

திருப்பத்தூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இதற்காக அரசு சிறப்பு முகாமை துவக்கியுள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்து இந்த முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு

image

வெம்பக்கோட்டை அருகே கீழகோதை நாச்சியார்புரம் காட்டு பகுதியில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் தகர செட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 20 கிலோ சோர்சா வெடிகள் மற்றும் 30 குரோஸ் கருந்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

News August 28, 2025

சென்னையில் வேலை: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை.29-ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 10th, 12th, ஐடிஐ, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 28, 2025

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து விபத்து

image

நேற்று காவிேரிப்பட்டினத்தில் இருந்து தர்மபுரி சென்ற அரசு பேருந்தில் கார் பின்புறத்தில் மோதியது. காரில் இருந்து பாண்டிச்சேரியில் இருந்து வந்தவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 28, 2025

சிறுமியை கர்ப்பமாகிய 16 வயது சிறுவன்

image

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் 16 வயதுடைய சிறுமியிடம் கடந்த 2024ம் ஆண்டு முதல் நட்பாக பழகியுள்ளார். பின்னர் மார்ச் 15ம் தேதி காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்ததை அடுத்து, புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 28, 2025

புதுவையில் விஜய கணபதி வீதியுலா

image

புதுவையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் பகுதி சடா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜய கணபதி ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் வீதி உலாவில், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சட்டப்பேரவை தலைவர் டிராக்டர் ஓட்டி சுவாமி வீதி உலாவினை தொடங்கி வைத்தார்.

News August 28, 2025

தி.மலை மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம்

image

இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மத்திய அரசின் சார்பில் தற்போது தேசிய தரநிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார்,திருவள்ளூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என பொது சுகாதார துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

image

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

News August 28, 2025

சேலம் அருகே நகைக்கடை உரிமையாளர் அடித்துக் கொலை!

image

சுக்கம்பட்டியை சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ் (35). இவர் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நேற்று மது அருந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரமேஷை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!